Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
அஞ்சலி
மேலாண்மை பொன்னுச்சாமி
ஆர். கோவர்த்தனம்
எம்.ஜி. சுரேஷ்
- |நவம்பர் 2017|
Share:
தமிழின் மிகச்சிறந்த கோட்பாட்டு எழுத்தாளரும், பின்நவீனத்துவத்தைப் பரவலாக அறியச் செய்தவருமான எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ் சிங்கப்பூரில் காலமானார். 1953ல் மதுரையில் பிறந்த இவர், எழுத்துப் பயணத்தைக் கவிதையில் துவங்கினார். பின்னர் சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் என்று ஆர்வங்கள் விரிந்தன. உலக இலக்கியங்களின் மீதும், இலக்கியக் கோட்பாடுகளின் மீதும் கொண்ட ஆர்வத்தால் அதுபற்றிய கட்டுரைகளை இதழ்களில் எழுதத் துவங்கினார். குறிப்பாக போஸ்ட் மார்டனிஸம் எனப்படும் பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பற்றி மிக விரிவாக, விளக்கமாகத் தமிழில் எழுதியவர் சுரேஷ்தான். "இரண்டாவது உலகைத் தேடி" என்பது இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்பாகும். "கனவுலகவாசியின் நனவுக் குறிப்புகள்", "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்", "அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்", "சிலந்தி", "யுரேகா என்றொரு நகரம்", "37" போன்றவை இவரது முக்கியமான நாவல்களாகும். கோட்பாடுகளைப் பற்றி இவர் எழுதிய "இஸங்கள் ஆயிரம்" என்ற நூலும் முக்கியமானதாகும். எழுத்துக்காகப் பல்வேறு விருதுகளும், பாராட்டுக்களும் பெற்றிருக்கும் சுரேஷ், சின்னத்திரை, சினிமா போன்றவற்றிலும் பங்காற்றியுள்ளார். (மேலுமறியப் பார்க்க: ஜூன், 2010 இதழ்,) சிங்கப்பூரில் மகள் வீட்டில் காலமானார்.

More

மேலாண்மை பொன்னுச்சாமி
ஆர். கோவர்த்தனம்
Share: 




© Copyright 2020 Tamilonline