Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
அஃக் பரந்தாமன்
வீரசந்தானம்
- |ஆகஸ்டு 2017|
Share:
பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம், இளவயதிலேயே ஓவிய ஆர்வம் கொண்டிருந்தார். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் ஓவியம் பயின்ற இவர், ஆலயச் சுவர்களில் இருக்கும் ஓவியங்கள்மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவற்றைப் பிரதி எடுத்துத் தனது திறனை வளர்த்துக் கொண்டார். தொடர்ந்து சென்னை ஓவியக் கல்லூரியில் தொழில்துறை ஆடை வடிவமைப்பில் மேற்படிப்பை முடித்தார். பின்னர் ராஜஸ்தானில் பனஸ்தலி வித்யாபீட் பல்கலைக்கழகத்தில் ஃப்ரெஸ்கோ (சுவரோவியம்) பயிற்சியை நிறைவுசெய்தார்.

நெசவாளர் சேவை மையத்தில் பணி அமைந்தது. சென்னை, மும்பை, திரிபுரா, நாக்பூர், மிசோரம், பெங்களூரு, காஞ்சிபுரம் என இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றார். பாலுமகேந்திராவின் 'சந்தியாராகம்' படத்தில் ஓவியராகவே நடித்தார். தொடர்ந்து பல படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தார். சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சிறந்த ஓவியருக்கான குடியரசுத் தலைவர் விருது, வனவிலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்துக்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது உட்படப் பல விருதுகளும் பெற்றவர் சந்தானம். தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை வடிவமைத்தவர் இவரே.

More

அஃக் பரந்தாமன்
Share: 




© Copyright 2020 Tamilonline