Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
தொடர்ந்து பயணிக்கிறது காலம்
வந்தது வசந்தம்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|மே 2007|
Share:
Click Here Enlargeசந்தக்கவிஞர்கள் சாற்றிப் புகழ்ந்திட
கந்தமெனக் கமழ் தென்றல் தவழ்ந்திட
சிந்தை சிலிர்த்தெழ சீர்மிகு இசையென
வந்தது வசந்தம், வாழ்த்துவோம் வருகென

ஆறெனப் பருவம் அமைத்தனர் முன்னோர்
ஆயினும் இங்குளோர் நான்கென வகுத்தனர்
பாயிரம் பாடிப் புகழ்வதற் கொத்ததோ
காய்ந்திடு வேனிலின் முன்வரு வசந்தமே!

செங்கால் நாரையும் செவ்வாய்க் கிளிகளும்
அங்கங்கு கிளம்பிச் சிறகினைச் சிலிர்க்கும்
பொங்கிடும் மகிழ்வுடன் பூங்குயில் கூவும்
திங்களும் மாசறு தட்டெனச் சொலிக்கும்

தலைமேல் தாங்கிய பனித்தகடுகளுடன்
சிலைபோல் நின்ற பல நெடு மரங்களும்
இலையும் தளிருமாய் அணிமணி பூண்டு
நிலமகளைத் தலை தாழ்த்தி வணங்கும்.

பார்மகள் போர்த்திய பனித்துகில் வீசிப்
பசும்புல் பட்டாடையில் பளிச்செனத் திகழ்வாள்
கூர் அம்பெனப் பாய் குளிர் பறந்தோடச்
சீர் மிகு சித்திரை கொணரும் வசந்தம்

பாயும் நீரில் கங்கையும் நானே
பருவங்களிலோ வசந்தம் நானென
வேய்ங்குழலோன் முன் கீதையிலுரைத்த
தூய வசந்தத்தைத் துதித்து மகிழ்வோம்.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

தொடர்ந்து பயணிக்கிறது காலம்
Share: 




© Copyright 2020 Tamilonline