Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
ஹைக்கூ...
- ரா. சுந்தரமூர்த்தி|ஏப்ரல் 2001|
Share:
Click Here Enlargeரோஜாக்களை பறிக்கும் அவசரத்தில்
மிதித்து விடாதீர்கள்
புல்வெளிப் பூக்களை.

பெருமாள் கோயிலில் நாமம்
சிவன் கோயிலில் திருநீறு
மதயானைகள்.

சிரித்துக் கொண்டிருக்கிறோம்
நானும் அவளும்
புகைப்பட ஆல்பம்.

காதலர்கள் காதுக்கு
எட்டுவதே இல்லை.
அலைகளின் அழைப்பு.

திறக்காத கதவையே
சலிக்காமல் தட்டுகிறது.
மரங்கொத்தி பறவை.

தலையாட்டுகிறது மரம்
தளம் போடுகிறது இலை
காற்றின் பாடல்.

எடை இயந்திர ஜோசியம்
பொய் சொன்னது
நீ வராத நாளில்.
ஒரு துண்டு வானம்
கொஞ்சம் நட்சத்திரங்கள்
ஏரியின் நிழல்.

சுகமான வாழ்க்கை
ஆனால் சிறை
மாம்பழத்து வண்டு.

கருட தரிசனம்
நிமிர்ந்தால் விழுந்தது
காக்கை எச்சம்.

ஆராதனைக்கு அவசரமில்லை
இன்னும் மலரட்டும்
பூக்கள்.

படிக்கும் முன்பே
அலை அழித்தது
நண்டு எழுதிய கவிதை.

சொல்லித் தராதே
கிளிக்கு
உன் வார்த்தைகளை.

உதிர்ந்த மலருக்கு உற்சவம்
எறும்புகளின் பிடியில்
உயிரற்ற வண்ணத்துப்பூச்சி.


இரா. சுந்தரமூர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline